வாய்ப்பிற்கான காத்திருப்பும் வாகை சூடப்படவேண்டிய பொறுமையும்
M.I. Muhammadh Safshath (BSc {Hons} in QS)
University of Moratuwa
மெல்லக் கதிரொளி கீற்றெனப் பரவி மூழ்கிக் கிடக்கும் இருள் விலக்கிப் பாரெங்கும் பகலொளி பரப்பிடும் பொழுதுகளை காணும் போதெல்லாம் தோன்றுகிறது, சோர்வால் சூரியன் சோம்பலுற்றுப் பரவ மறுத்து படுத்துக் கிடந்தால் பாரிற்குப் பகலென்பது பகற்கனவு தானே! தடைகளைக் காணும் போது தான் தாண்ட வேண்டுமென்ற எண்ணம் தாறுமாறாய்த் தோன்றுகிறது.
தாண்டவமாடும் தடைகள் சூழ வாழ்வே ரணமாய் தெரியும் போது, தடைகள் தாண்ட எண்ணம் வந்தால் சோர்வென்பது வாழ்வில் கிடையாது. தடைகளும், குறுக்கிடைகளும் பலதாய் வரும் பொழுதுகளிலெல்லாம் ஏனோ பலரும், தடைகள் தம்மை விட்டும் தாமாய் நீங்க வேண்டும் என்று காத்திருப்புக்களை மேற்கொள்கின்றனர். தானே இருள் விலகும் என்று இருள் விலகும் வரை தன் வெளிப்படுகைக்காக கதிரவன் காத்திருப்பு மேற்கொண்டால் விடியலின் இருள் நீங்கல் என்பதே சாத்தியமற்று போதல் யாவரும் அறிந்ததே. வெறுமனே காத்திருப்பால் நாளின் விடியலே தடைப்படுகிற போது, வாழ்வின் விடியலை வெறுமனே காத்திருப்பு மேற்கொள்தல் கொண்டு மாத்திரம் அடைந்திட முடியும் என்று அவாக் கொள்வது அறியாமையன்றி வேறென்ன?!
வாய்ப்புக்களை பயன்படுத்திடக் கற்றுக் கொண்ட பலரும் வாய்ப்புக்களுக்காக காத்திருப்புக்களை மேற்கொள்வதைப் பாரெங்கும் பார்த்திட முடிகிறது. வாகை சூடப்பட வேண்டிய பொறுமை அது என்பது அவர்களது எண்ணத்தில் உதயமாகிட ஒரு சிறு நியாயங்கூட இருப்பதாக சிந்திக்கவும் தோன்றவில்லை. வாய்ப்புகளுக்காய் காத்திருக்கும் தருணங்களுள் பல வாய்ப்புக்களை தோற்றுவித்திடவும் முடியும் என்பதை உணரும் வரை, விடியலுக்காய் இருள் தானே விலகும் வரை உதிக்க மறுக்கும் கதிரவரே தாங்களுமென்பதை புரிதல் அவசியம் என்பதை விட ஏற்றுக்கொண்டே ஆதல் வெண்டும் எனலாம்.
காத்திருப்போ, சோர்வோ கதிரவ அகராதியில் கிடையாதென்பதால் தொடர்ந்தும் விடியல் தினங்களில் சாத்தியமாகின்றது. வாழ்வின் விடியலுக்காய் காத்திருப்பு மேற்கொண்டால் வாய்ப்பு அமையாதென்பது அர்த்தமல்ல. நாளை என்பதே நிச்சயமற்ற வாழ்வில் நேர விரயமென்பது கவலைக்குரியதே! மறுமையிலும் கேள்விக்குரியதே! பயனற்ற காத்திருப்பு தவிர்த்து பல வாய்ப்புக்களை தோற்றுவிக்கவோ, அதை நோக்கி பயணிக்கவோ முடியும் என்பதே இவ்விடத்தில் அழுத்தப்படுகிறது. வாழ்வென்பது சைக்கிளோட்டம் போன்றது அதில் நிலை பேண தொடர்ந்தும் முன்னேறுதல் அவசியமாகிறது. ஐன்ஸ்டீனை கை குலுக்க மனம் நாடுகின்றது அத்தனை பொருத்தமான உவமானமிது.
தவறாய்ப் புரியப்பட்ட பொறுமையின் பொருளே துடைத்தெறியப்படவேண்டும். தட்டத்தட்ட தட்டமிழ்ந்து தன்னிலை இழந்து தாழ்வடைதலை பொறுமை என்று பெருமை இலக்கணம் வகுத்தது யாரென்று தான் தெரியவில்லை. மோதும் பந்தை திருப்பியடிக்கும் சுவரில் கூட பொறுமை புலனாகிறது. சுவரை மோதும் பந்து எப்பொழுதும் ஒரே விதமாய் திரும்புவதில்லை. படும்விதம் மாறுவது கொண்டு அதன் திரும்பலும் மாறுகின்றது. இங்கு தான் சுவரின் பொறுமை புலனாகின்றது. புறச்சூழல் புரிவது யாதெனினும் தன்னிலை தாங்குவதென்று மட்டுமிராமல் வருந்தடையின் கோணல் அறிந்து தக்க பதிலும் அதற்காய்ப் பகிர்கிறது.
சொல்லொனாத் துயர் விழைந்த மக்காவின் இஸ்லாமிய யுகம் பொறுமைக்கான இலக்கணம் எனலாம். வரலாற்றுப்பாடங்களே வருங்கால வழிகாட்டிகள். வந்த துயர்களெல்லாம் தாங்கப்பட்டன வெறுமனே அர்த்தமற்ற தங்கல்களாக அல்ல மாறாக திட்டமிடப்பட்ட முன்னோக்கல்களுடன், வாய்ப்புகளின் ஆக்குதல்களுடன். கடினங்களை இன் முகங்கொண்டு வரவேற்ற அதே தருணம், தொடர்ந்தும் அந்நிலை தொடராதிருக்கவும், இஸ்லாமிய யுகத்தின் மாபெரும் விருத்திக்குமென மிகச் சிறந்த பாரியதொரு தூர நோக்கை நோக்கி சகிப்புத்தன்மையோடு அச்சமூகம் வழிநடத்தப்பட்டுக்கொண்டிருந்தமையை உணர முடிகிறது. சகிப்புத்தன்மைக்கும், பொறுமைக்கும் அகராதிப் பொருளான அதே சமூகம் அதே தருணங்களில் பாரிய முன்னோக்குதல்களை மேற்கொண்டு, வாய்ப்புக்களை ஆக்கியும்; நோக்கியும் திட்டமிடலுடன் முன்னேறியதில் வழிவரும் சமூகங்களுக்கு பாரியதொரு படிப்பினை உள்ளது.
தடைகளைத் தாங்கிக்கொள்வது கடமை; தடைகளை சகிப்புத் தன்மை, பொறுமை கொண்டு ஏற்றுக்கொள்ளும் அதே தருணம், கதிரொளியென அத்தடைகளை ஊடுறுவி அவற்றை தகர்த்தெறிந்து வாழ்வின் விடியலுக்கு வழி தேடி வாய்ப்புக்களுக்காக வெறுமனே காத்திருக்காது, வாய்ப்புகளை நோக்கி முன்னேறும் தருணமிது. வாய்ப்புக்கான காத்திருப்பை வாகை சூடப்பட வேண்டிய பொறுமை என்று பெருமை இலக்கணம் பேசுவது விடுத்து வாய்ப்புக்களை நோக்கி தொடர்ந்தும் பயணிக்கத் தயாராதல் காலத்தின் தேவையாக உள்ளது. சில வேளைகளில் முன்னோக்குதல்கள் பின்னடைதல்களையும், முயற்சிகள் தோல்விகளையும் தோற்றுவிப்பதுமுண்டு. உணர்ந்து கொள்ளுங்கள்; முயன்று வரும் தோல்வி; முயலாது வரும் வெற்றியிலும் சுவையானது.
M.I. Muhammadh Safshath (BSc {Hons} in QS)
University of Moratuwa
மெல்லக் கதிரொளி கீற்றெனப் பரவி மூழ்கிக் கிடக்கும் இருள் விலக்கிப் பாரெங்கும் பகலொளி பரப்பிடும் பொழுதுகளை காணும் போதெல்லாம் தோன்றுகிறது, சோர்வால் சூரியன் சோம்பலுற்றுப் பரவ மறுத்து படுத்துக் கிடந்தால் பாரிற்குப் பகலென்பது பகற்கனவு தானே! தடைகளைக் காணும் போது தான் தாண்ட வேண்டுமென்ற எண்ணம் தாறுமாறாய்த் தோன்றுகிறது.
தாண்டவமாடும் தடைகள் சூழ வாழ்வே ரணமாய் தெரியும் போது, தடைகள் தாண்ட எண்ணம் வந்தால் சோர்வென்பது வாழ்வில் கிடையாது. தடைகளும், குறுக்கிடைகளும் பலதாய் வரும் பொழுதுகளிலெல்லாம் ஏனோ பலரும், தடைகள் தம்மை விட்டும் தாமாய் நீங்க வேண்டும் என்று காத்திருப்புக்களை மேற்கொள்கின்றனர். தானே இருள் விலகும் என்று இருள் விலகும் வரை தன் வெளிப்படுகைக்காக கதிரவன் காத்திருப்பு மேற்கொண்டால் விடியலின் இருள் நீங்கல் என்பதே சாத்தியமற்று போதல் யாவரும் அறிந்ததே. வெறுமனே காத்திருப்பால் நாளின் விடியலே தடைப்படுகிற போது, வாழ்வின் விடியலை வெறுமனே காத்திருப்பு மேற்கொள்தல் கொண்டு மாத்திரம் அடைந்திட முடியும் என்று அவாக் கொள்வது அறியாமையன்றி வேறென்ன?!
வாய்ப்புக்களை பயன்படுத்திடக் கற்றுக் கொண்ட பலரும் வாய்ப்புக்களுக்காக காத்திருப்புக்களை மேற்கொள்வதைப் பாரெங்கும் பார்த்திட முடிகிறது. வாகை சூடப்பட வேண்டிய பொறுமை அது என்பது அவர்களது எண்ணத்தில் உதயமாகிட ஒரு சிறு நியாயங்கூட இருப்பதாக சிந்திக்கவும் தோன்றவில்லை. வாய்ப்புகளுக்காய் காத்திருக்கும் தருணங்களுள் பல வாய்ப்புக்களை தோற்றுவித்திடவும் முடியும் என்பதை உணரும் வரை, விடியலுக்காய் இருள் தானே விலகும் வரை உதிக்க மறுக்கும் கதிரவரே தாங்களுமென்பதை புரிதல் அவசியம் என்பதை விட ஏற்றுக்கொண்டே ஆதல் வெண்டும் எனலாம்.
காத்திருப்போ, சோர்வோ கதிரவ அகராதியில் கிடையாதென்பதால் தொடர்ந்தும் விடியல் தினங்களில் சாத்தியமாகின்றது. வாழ்வின் விடியலுக்காய் காத்திருப்பு மேற்கொண்டால் வாய்ப்பு அமையாதென்பது அர்த்தமல்ல. நாளை என்பதே நிச்சயமற்ற வாழ்வில் நேர விரயமென்பது கவலைக்குரியதே! மறுமையிலும் கேள்விக்குரியதே! பயனற்ற காத்திருப்பு தவிர்த்து பல வாய்ப்புக்களை தோற்றுவிக்கவோ, அதை நோக்கி பயணிக்கவோ முடியும் என்பதே இவ்விடத்தில் அழுத்தப்படுகிறது. வாழ்வென்பது சைக்கிளோட்டம் போன்றது அதில் நிலை பேண தொடர்ந்தும் முன்னேறுதல் அவசியமாகிறது. ஐன்ஸ்டீனை கை குலுக்க மனம் நாடுகின்றது அத்தனை பொருத்தமான உவமானமிது.
தவறாய்ப் புரியப்பட்ட பொறுமையின் பொருளே துடைத்தெறியப்படவேண்டும். தட்டத்தட்ட தட்டமிழ்ந்து தன்னிலை இழந்து தாழ்வடைதலை பொறுமை என்று பெருமை இலக்கணம் வகுத்தது யாரென்று தான் தெரியவில்லை. மோதும் பந்தை திருப்பியடிக்கும் சுவரில் கூட பொறுமை புலனாகிறது. சுவரை மோதும் பந்து எப்பொழுதும் ஒரே விதமாய் திரும்புவதில்லை. படும்விதம் மாறுவது கொண்டு அதன் திரும்பலும் மாறுகின்றது. இங்கு தான் சுவரின் பொறுமை புலனாகின்றது. புறச்சூழல் புரிவது யாதெனினும் தன்னிலை தாங்குவதென்று மட்டுமிராமல் வருந்தடையின் கோணல் அறிந்து தக்க பதிலும் அதற்காய்ப் பகிர்கிறது.
சொல்லொனாத் துயர் விழைந்த மக்காவின் இஸ்லாமிய யுகம் பொறுமைக்கான இலக்கணம் எனலாம். வரலாற்றுப்பாடங்களே வருங்கால வழிகாட்டிகள். வந்த துயர்களெல்லாம் தாங்கப்பட்டன வெறுமனே அர்த்தமற்ற தங்கல்களாக அல்ல மாறாக திட்டமிடப்பட்ட முன்னோக்கல்களுடன், வாய்ப்புகளின் ஆக்குதல்களுடன். கடினங்களை இன் முகங்கொண்டு வரவேற்ற அதே தருணம், தொடர்ந்தும் அந்நிலை தொடராதிருக்கவும், இஸ்லாமிய யுகத்தின் மாபெரும் விருத்திக்குமென மிகச் சிறந்த பாரியதொரு தூர நோக்கை நோக்கி சகிப்புத்தன்மையோடு அச்சமூகம் வழிநடத்தப்பட்டுக்கொண்டிருந்தமையை உணர முடிகிறது. சகிப்புத்தன்மைக்கும், பொறுமைக்கும் அகராதிப் பொருளான அதே சமூகம் அதே தருணங்களில் பாரிய முன்னோக்குதல்களை மேற்கொண்டு, வாய்ப்புக்களை ஆக்கியும்; நோக்கியும் திட்டமிடலுடன் முன்னேறியதில் வழிவரும் சமூகங்களுக்கு பாரியதொரு படிப்பினை உள்ளது.
தடைகளைத் தாங்கிக்கொள்வது கடமை; தடைகளை சகிப்புத் தன்மை, பொறுமை கொண்டு ஏற்றுக்கொள்ளும் அதே தருணம், கதிரொளியென அத்தடைகளை ஊடுறுவி அவற்றை தகர்த்தெறிந்து வாழ்வின் விடியலுக்கு வழி தேடி வாய்ப்புக்களுக்காக வெறுமனே காத்திருக்காது, வாய்ப்புகளை நோக்கி முன்னேறும் தருணமிது. வாய்ப்புக்கான காத்திருப்பை வாகை சூடப்பட வேண்டிய பொறுமை என்று பெருமை இலக்கணம் பேசுவது விடுத்து வாய்ப்புக்களை நோக்கி தொடர்ந்தும் பயணிக்கத் தயாராதல் காலத்தின் தேவையாக உள்ளது. சில வேளைகளில் முன்னோக்குதல்கள் பின்னடைதல்களையும், முயற்சிகள் தோல்விகளையும் தோற்றுவிப்பதுமுண்டு. உணர்ந்து கொள்ளுங்கள்; முயன்று வரும் தோல்வி; முயலாது வரும் வெற்றியிலும் சுவையானது.