வெற்றி பெறும் வாதமும் தோல்வியுறும் வாதியும்
M.I. Muhammadh Safshath (BSc {Hons} in QS)
University of Moratuwa
நிதர்சன உலகில் நிரந்தரம் கொண்ட ஒன்றாய் நிலையாய் இடம்பிடித்த பலவற்றுள் வாதமும் ஒன்றே எனலாம். எப்பிரச்சினை வரினும் எத்தரப்பாரும் எதுவித யோசனையுமின்றி மேற்கொள்ளும் உடனடித் தீர்வாய் வாதம் அமைவதை பரவலாய்க் காணமுடிகிறது. தவறைக் கண்டிக்கும் தந்தையிடம் தன் வாதத் திறனால் அவர் மேல் பேசி, உரத்துக் கத்திப் பின் வெற்றிக் களிப்பால் நெஞ்சை நிமிர்த்தி திரும்பி நடக்கும் மகன்களைக் காணும் போது தான் வெற்றி பெறும் வாதம் அவதானிக்கப்படுகிற அதே தருணம் தோல்வியுற்றது அங்கே வாதி தானே என்ற அவலமும் வெளிச்சமாகின்றது.
வாதம் என்பது வேண்டுமா? வேண்டாமா? என்னும் வாதத்துக்கே இடமில்லை; வாதம் என்பது அத்தியவசியமானது. ஆனால் அது எங்கே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது அதிலும் மேன்மையாய்க் கடமையானது. நீரின்றி ஜீவியம் என்பது துளியும் சாத்தியமாகாது. உயிரின் நிலவுகைக்கு நீர் அத்தியவசியமானது, அதே நீர், மிகைத்த களைப்பால் அதிகம் இதயம் துடிக்கிற தருணங்களில் அருந்தப்படுகிற பொழுது உயிர் காவும் கொல்லியாய் மாறுவதை யாரால் தடுத்திட இயலும்?! அத்தியவசியமானது என்பதால் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் பொருத்தமானது என அர்த்தங்கொண்டிட முடியாது என்பதற்கு தண்ணீர் மட்டுமல்ல எம்மைச் சூழ உள்ள ஒவ்வொன்றும் அத்தாட்சி பகர்ந்த வண்ணமே உள்ளன.
வழுக்கள் சிறிதும் வந்திட முடியா வல்லோனின் வார்த்தைகள் இவ்வாறு அமைகின்றன, ``…அழகிய முறையிலேயன்றி தர்க்கம் செய்யாதீர்கள்…`` (29:46). தர்க்கம் புரிய வேண்டாம் என முழுத்தடை தராமல் அழகிய முறையிலேயன்றி தர்க்கிக்க வேண்டாம் எனப் பணிக்கும் இறையோனின் இங்கித இலக்கியம் இதமாய்த் தோன்றுகிறது. வாதிக்கத் தேவை எற்படும் தருணங்களில் வாதிப்பதில் தவறேதும் இல்லை ஆனால், அத்தகைய வாதம் கூட அழகிய முறையில் அமைந்திடல் வேண்டுமெனும் இறைமறையின் வழிகாட்டல் உன்னிப்பாய் அவதானிக்கத்தக்கது. இது போலொரு மறைவரியாக, ``…அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் தர்க்கிப்பீராக! …`` (16:125). என்பதையும் எடுத்துக்காட்டமுடியும்.
தருணங்களால் தீர்மானிக்கப்படுகின்ற வாதங்கள் என்பது தாண்டி வாதங்களாலேயே தருணங்கள் அமைகிற பொழுது தான் பல சமூக உறவுகளையும் விரிசல்களுடன் காண நேர்கிறது. வீடுகளில் இருந்து தொடங்கி சகல சமூக மக்கள் பிணைப்பு அலகுகளிலும் இன்று இதன் தாக்கம் அளப்பரியது. வாதத்திறன் கொண்டு தன் தரப்பு சரியோ? தவறோ? அதை நியாயப்படுத்தியே ஆக வேண்டும் என்பதற்காக வாதத்தை கேடயமாக்கும் பலரும், அதன் பின்னால் தொடரும் சிலதை முன்னால் எண்ணிடத் தவறுகிறார்கள்.
சல்லிப் பெறுமதியற்ற சிறு பிரச்சினைகளுக்காக உறவுகளுடன் வாதிக்கத் தொடங்கும் பலரும் வாதத் தருணங்களில் ஆக்ரோஷமாய் கட்டவிழ்க்கும் அதிவேக வார்த்தைகளின் அர்த்தம் உணர்வதில்லை. சென்றடையும் போது கேட்கப்படும் காதுகளை கொதிக்கச் செய்து, உள்ளங்களைக் குமுறச் செய்யும் எத்தனையோ வார்த்தைகள் எம்மிலிருந்து பிரிந்து செல்வதை நாம் உணர மறந்தாலும் முன்னிலை மறவாதென்பது என்னவோ உண்மை தான். பட்ட வடு மறையலாம் சொல்லிய சொல் மறையாதென்பார்கள். அதன் தாக்கம் தொடரும் வாழ்வில் விரிசலைத் தோற்றுவித்து முகம் பார்க்கக் கூட இயலாது வெட்கித் தலை குனியும் தருணங்கள் ஏராளம்! தாராளம்! வீரமாய் பேசிய வாதம் எடுபடுகிற போதும் அதன் பின் முகம் பார்க்க கூட இயலாமல் வெட்கித்தலை குனியும் பொழுது தான் வாதம் வென்றாலும் தோல்வியென்னவோ வாதிக்கும் சேர்த்து தான் என்பது உணர்வாகிறது.
``இரு தாடைகளுக்கு இடைப்பட்டதையும், இரு தொடைகளுக்கு இடைப்பட்டதையும் பேணிக்கொள்வதாக யார் உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவனத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றேன்`` என்பது நபிகளாரின் உத்தரவாதமாயிற்றே! எங்ஙணம் பொய்யாகும்?! அதிலுள்ள கடினங்கள் உணர்ந்து தான் அத்தகையதோர் வாக்குறுதி என்பதை நாளுக்கு நாள், நொடிக்கு நொடி உணர முடிகிறது. அண்மையில் அல்லாஹ்வின் புனித இல்லம் கஃபதுல்லாஹ்வை தாக்க முயன்ற கயவர்களை எண்ணி கோப மேலீட்டலும், உணர்வும் மிகுந்து இரத்தம் சூடேறியதையும், கைகள் முறுக்கேறியதையும் எண்ணியதாய், நபிகளாரின் நவிழல் ஒன்றை நினைவுபடுத்த மனம் நாடுகிறது. ``ஒரு விசுவாசியின் உயிர், மானம் கஃபதுல்லாஹ்வை விட உயர்வானது.`` எமது வாதங்கள் பிறர் மானங்களை சூரையாடும் தருணங்களை எண்ணுகையில் கண்கள் சிந்துகின்றன துளிகளைத் தூரல்களாய்.
எதற்காய் வாதம் என்பதெல்லாம் கருது பொருளற்றுப் போய் நட்புலகில் தன் நண்பன் தெளிவாய்த் தவறு புரிந்தான் என்றிருந்தும் நட்பைக் காக்க கதாநாயகனாகும் எம்மில் பலரும் தாங்கும் முதற் கேடயம் வாதம் தான் என்பது யாவரும் அறிந்ததே! எங்ஙணமேனும் வாதாடி தவறே செய்திருப்பினும் நண்பனைக் காப்பாற்றிய வெற்றி எக்களிப்பால் அவன் தோள்களை அணைத்து சேர்ந்தே நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதமடைந்த எத்தனையோ தருணங்கள் எம்முன் உலா வராமலில்லை. ``…எனவே, சதி மோசக்காரர்களின் சார்பில் வாதாடுபவர்களாகிவிடாதீர்கள்.`` (4:105) என்னும் வல்லோனின் பணிப்புரை பற்றிய விழிப்புணர்வு எம்மில் என்ன தான் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தருணமிது.
தந்தையுடன் வாதம், தாயுடன் வாதம், சகோதரங்களுடன் வாதம், நட்புகளுடன் வாதம், தன் பக்கம் தவறிருந்தும் விதண்டா வாதம், வலிமை குறைந்தோரை அடக்கியாள வாதம் என அன்றாட வாழ்வில் சற்று அதிகமாகவே வாதங்கள் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்ட இத் தருணங்களில் சற்றே சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இவ்வீண் வாதங்களின் ஈற்றே நாம் ஈட்டிய வெற்றி தான் என்ன? பெற்றோரை மதியா பிள்ளைகள், முகம் பார்க்க விரும்பா சகோதரங்கள், அடி தடி அரங்கேறும் நட்புலகம் இவைகள் தான் எமது வாதத் திறன் தேடித்தரவுள்ள தலை சிறந்த வெகுமதிகள். அழகிய முறையில் வாதியுங்கள்; தவறில்லை; தளமும், தருணமும் உணர்ந்து உண்மைக்காய் வாதியுங்கள். உங்கள் வாதத்தின் வெற்றி உங்களை விட்டும் ஒரு உறவை நீக்குமென்றுணர்ந்தால், வாய் மூடி வாதம் தவிர்த்து வாதத்தின் தோல்வியாய் அந்த உறவைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
M.I. Muhammadh Safshath (BSc {Hons} in QS)
University of Moratuwa
நிதர்சன உலகில் நிரந்தரம் கொண்ட ஒன்றாய் நிலையாய் இடம்பிடித்த பலவற்றுள் வாதமும் ஒன்றே எனலாம். எப்பிரச்சினை வரினும் எத்தரப்பாரும் எதுவித யோசனையுமின்றி மேற்கொள்ளும் உடனடித் தீர்வாய் வாதம் அமைவதை பரவலாய்க் காணமுடிகிறது. தவறைக் கண்டிக்கும் தந்தையிடம் தன் வாதத் திறனால் அவர் மேல் பேசி, உரத்துக் கத்திப் பின் வெற்றிக் களிப்பால் நெஞ்சை நிமிர்த்தி திரும்பி நடக்கும் மகன்களைக் காணும் போது தான் வெற்றி பெறும் வாதம் அவதானிக்கப்படுகிற அதே தருணம் தோல்வியுற்றது அங்கே வாதி தானே என்ற அவலமும் வெளிச்சமாகின்றது.
வாதம் என்பது வேண்டுமா? வேண்டாமா? என்னும் வாதத்துக்கே இடமில்லை; வாதம் என்பது அத்தியவசியமானது. ஆனால் அது எங்கே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது அதிலும் மேன்மையாய்க் கடமையானது. நீரின்றி ஜீவியம் என்பது துளியும் சாத்தியமாகாது. உயிரின் நிலவுகைக்கு நீர் அத்தியவசியமானது, அதே நீர், மிகைத்த களைப்பால் அதிகம் இதயம் துடிக்கிற தருணங்களில் அருந்தப்படுகிற பொழுது உயிர் காவும் கொல்லியாய் மாறுவதை யாரால் தடுத்திட இயலும்?! அத்தியவசியமானது என்பதால் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் பொருத்தமானது என அர்த்தங்கொண்டிட முடியாது என்பதற்கு தண்ணீர் மட்டுமல்ல எம்மைச் சூழ உள்ள ஒவ்வொன்றும் அத்தாட்சி பகர்ந்த வண்ணமே உள்ளன.
வழுக்கள் சிறிதும் வந்திட முடியா வல்லோனின் வார்த்தைகள் இவ்வாறு அமைகின்றன, ``…அழகிய முறையிலேயன்றி தர்க்கம் செய்யாதீர்கள்…`` (29:46). தர்க்கம் புரிய வேண்டாம் என முழுத்தடை தராமல் அழகிய முறையிலேயன்றி தர்க்கிக்க வேண்டாம் எனப் பணிக்கும் இறையோனின் இங்கித இலக்கியம் இதமாய்த் தோன்றுகிறது. வாதிக்கத் தேவை எற்படும் தருணங்களில் வாதிப்பதில் தவறேதும் இல்லை ஆனால், அத்தகைய வாதம் கூட அழகிய முறையில் அமைந்திடல் வேண்டுமெனும் இறைமறையின் வழிகாட்டல் உன்னிப்பாய் அவதானிக்கத்தக்கது. இது போலொரு மறைவரியாக, ``…அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் தர்க்கிப்பீராக! …`` (16:125). என்பதையும் எடுத்துக்காட்டமுடியும்.
தருணங்களால் தீர்மானிக்கப்படுகின்ற வாதங்கள் என்பது தாண்டி வாதங்களாலேயே தருணங்கள் அமைகிற பொழுது தான் பல சமூக உறவுகளையும் விரிசல்களுடன் காண நேர்கிறது. வீடுகளில் இருந்து தொடங்கி சகல சமூக மக்கள் பிணைப்பு அலகுகளிலும் இன்று இதன் தாக்கம் அளப்பரியது. வாதத்திறன் கொண்டு தன் தரப்பு சரியோ? தவறோ? அதை நியாயப்படுத்தியே ஆக வேண்டும் என்பதற்காக வாதத்தை கேடயமாக்கும் பலரும், அதன் பின்னால் தொடரும் சிலதை முன்னால் எண்ணிடத் தவறுகிறார்கள்.
சல்லிப் பெறுமதியற்ற சிறு பிரச்சினைகளுக்காக உறவுகளுடன் வாதிக்கத் தொடங்கும் பலரும் வாதத் தருணங்களில் ஆக்ரோஷமாய் கட்டவிழ்க்கும் அதிவேக வார்த்தைகளின் அர்த்தம் உணர்வதில்லை. சென்றடையும் போது கேட்கப்படும் காதுகளை கொதிக்கச் செய்து, உள்ளங்களைக் குமுறச் செய்யும் எத்தனையோ வார்த்தைகள் எம்மிலிருந்து பிரிந்து செல்வதை நாம் உணர மறந்தாலும் முன்னிலை மறவாதென்பது என்னவோ உண்மை தான். பட்ட வடு மறையலாம் சொல்லிய சொல் மறையாதென்பார்கள். அதன் தாக்கம் தொடரும் வாழ்வில் விரிசலைத் தோற்றுவித்து முகம் பார்க்கக் கூட இயலாது வெட்கித் தலை குனியும் தருணங்கள் ஏராளம்! தாராளம்! வீரமாய் பேசிய வாதம் எடுபடுகிற போதும் அதன் பின் முகம் பார்க்க கூட இயலாமல் வெட்கித்தலை குனியும் பொழுது தான் வாதம் வென்றாலும் தோல்வியென்னவோ வாதிக்கும் சேர்த்து தான் என்பது உணர்வாகிறது.
``இரு தாடைகளுக்கு இடைப்பட்டதையும், இரு தொடைகளுக்கு இடைப்பட்டதையும் பேணிக்கொள்வதாக யார் உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவனத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றேன்`` என்பது நபிகளாரின் உத்தரவாதமாயிற்றே! எங்ஙணம் பொய்யாகும்?! அதிலுள்ள கடினங்கள் உணர்ந்து தான் அத்தகையதோர் வாக்குறுதி என்பதை நாளுக்கு நாள், நொடிக்கு நொடி உணர முடிகிறது. அண்மையில் அல்லாஹ்வின் புனித இல்லம் கஃபதுல்லாஹ்வை தாக்க முயன்ற கயவர்களை எண்ணி கோப மேலீட்டலும், உணர்வும் மிகுந்து இரத்தம் சூடேறியதையும், கைகள் முறுக்கேறியதையும் எண்ணியதாய், நபிகளாரின் நவிழல் ஒன்றை நினைவுபடுத்த மனம் நாடுகிறது. ``ஒரு விசுவாசியின் உயிர், மானம் கஃபதுல்லாஹ்வை விட உயர்வானது.`` எமது வாதங்கள் பிறர் மானங்களை சூரையாடும் தருணங்களை எண்ணுகையில் கண்கள் சிந்துகின்றன துளிகளைத் தூரல்களாய்.
எதற்காய் வாதம் என்பதெல்லாம் கருது பொருளற்றுப் போய் நட்புலகில் தன் நண்பன் தெளிவாய்த் தவறு புரிந்தான் என்றிருந்தும் நட்பைக் காக்க கதாநாயகனாகும் எம்மில் பலரும் தாங்கும் முதற் கேடயம் வாதம் தான் என்பது யாவரும் அறிந்ததே! எங்ஙணமேனும் வாதாடி தவறே செய்திருப்பினும் நண்பனைக் காப்பாற்றிய வெற்றி எக்களிப்பால் அவன் தோள்களை அணைத்து சேர்ந்தே நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதமடைந்த எத்தனையோ தருணங்கள் எம்முன் உலா வராமலில்லை. ``…எனவே, சதி மோசக்காரர்களின் சார்பில் வாதாடுபவர்களாகிவிடாதீர்கள்.`` (4:105) என்னும் வல்லோனின் பணிப்புரை பற்றிய விழிப்புணர்வு எம்மில் என்ன தான் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தருணமிது.
தந்தையுடன் வாதம், தாயுடன் வாதம், சகோதரங்களுடன் வாதம், நட்புகளுடன் வாதம், தன் பக்கம் தவறிருந்தும் விதண்டா வாதம், வலிமை குறைந்தோரை அடக்கியாள வாதம் என அன்றாட வாழ்வில் சற்று அதிகமாகவே வாதங்கள் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்ட இத் தருணங்களில் சற்றே சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இவ்வீண் வாதங்களின் ஈற்றே நாம் ஈட்டிய வெற்றி தான் என்ன? பெற்றோரை மதியா பிள்ளைகள், முகம் பார்க்க விரும்பா சகோதரங்கள், அடி தடி அரங்கேறும் நட்புலகம் இவைகள் தான் எமது வாதத் திறன் தேடித்தரவுள்ள தலை சிறந்த வெகுமதிகள். அழகிய முறையில் வாதியுங்கள்; தவறில்லை; தளமும், தருணமும் உணர்ந்து உண்மைக்காய் வாதியுங்கள். உங்கள் வாதத்தின் வெற்றி உங்களை விட்டும் ஒரு உறவை நீக்குமென்றுணர்ந்தால், வாய் மூடி வாதம் தவிர்த்து வாதத்தின் தோல்வியாய் அந்த உறவைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.